Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்செந்தூரில் குண்டும், குழியுமான சாலைக்கு, மலர் வளையம் வைத்து, நூதன முறையில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி !

திருச்செந்தூரில் குண்டும், குழியுமான சாலைக்கு,   மலர் வளையம் வைத்து, நூதன முறையில்  போராட்டம் நடத்திய  இந்து முன்னணி  !

DhivakarBy : Dhivakar

  |  12 Nov 2021 10:32 AM GMT

திருச்செந்தூரில் குண்டும் குழியுமான சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்து முன்னணி அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தியது.

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஏராளம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் பரமன்குறிச்சி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் அச்சாலை குண்டும் குழியாக காணப்படுகிறது. பலமுறை இந்துமுன்னனணி சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால். இன்று அந்த சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போரட்டத்தை அரங்கேற்றியது இந்து முன்னணி இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் :

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்லும் பரமன்குறிச்சி சாலை பல மாதங்களாக குண்டும் குழியாக காணப்படுகிறது. பலமுறை கோப்ரிக்கை வைத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்து முன்னணி மாநிலதுணைத் தலைவர் திரு. வி.பி ஜெயக்குமார் தலைமையில் குண்டும் குழியுமான சாலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம்.

என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.




Hindu Munnani


Next Story
கதிர் தொகுப்பு
Trending News