Kathir News
Begin typing your search above and press return to search.

உண்டியல் காசு எண்ணும் போது திருட்டு - கொத்தாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்!

உண்டியல் காசு எண்ணும் போது திருட்டு - கொத்தாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரிகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 May 2022 10:52 AM GMT

திருட்டு செயலில் ஈடுபட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஓசூர் காவல் துறையினருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி, கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

அப்போது பணியில் ஈடுபட்ட ஓசூர் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரபு, காளிகாம்பாள் கோவில் பணியாளர் சந்திரசேகர் ஆகியோர் உண்டியல் பயணம் 10 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனர். இது கோவில் செயல் அலுவலர் நடராஜனுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிறகு ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

திருட்டில் ஈடுபட்ட பிரபு, சந்திரசேகர் மற்றும் உடந்தையாக இருந்த அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Inputs From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News