மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி போட்டுக்கொண்டேன்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி போட்டுக்கொண்டேன்! அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
By : Kathir Webdesk
சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கடந்த 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. முதற் கட்டமாக கொரோனா தொற்றுக்கு மத்தியில் போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. அது போன்று தடுப்பூசி போடும்போது சிலர் தடுப்பூசி மருந்தை பற்றி தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் மரணம் அடைந்து விடுவதாகவும் கூறினார்கள். இதனால் முன்களப் பணியாளர்களான துப்புறவுப் பணியாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான மனநிலை ஏற்பட்டது. அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்த படங்கள் தற்போது அனைத்து பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் முன்கள பணியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற வகையில் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். எனவே கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
இனிமேல் ஆவது அரசு சொல்வதை கேட்டு பொதுமக்கள் நடந்து கொண்டால், கொரோனா தொற்றில் இருந்து விடுதலை பெறலாம். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு நடத்தும் சதி வலையில் மக்கள் சிக்க வேண்டாம் என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.