Kathir News
Begin typing your search above and press return to search.

சுயசரிதம் எழுதினால் பல உண்மைகள் வெளிவரும்.. ராம மோகன் ராவ்.!

சுயசரிதம் எழுதினால் பல உண்மைகள் வெளிவரும்.. ராம மோகன் ராவ்.!

சுயசரிதம் எழுதினால் பல உண்மைகள் வெளிவரும்.. ராம மோகன் ராவ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2020 7:15 PM GMT

நான் சுயசரிதம் எழுதினால் சில உண்மைகள் வெளிவரும், பிரச்னை ஆகிடும் என தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் தெரிவித்துள்ளார்.

இந்து ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: ராம மோகன் ராவ், தமிழகத்தில் 10 லட்சம் குடும்பங்கள் கோயில்களை நம்பி உள்ளனர்.

ஆனால் கோயிலை நம்பியுள்ள சமுதாயங்கள் இன்னும் கீழ் மட்டத்திலேயே உள்ளன. அவர்கள் முன்னேற்றத்தில் அரசு அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. அவர்களுக்காக அரசிடம் முறையிட உள்ளேன்.

மேலும், ஜெயலலிதாவின் மறைவு, சட்டமன்றத்தில் ராணுவம் நுழைந்தது, பொங்கல் பரிசு, போன்ற அரசியல் சம்பந்தப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிப்பதை தவிர்த்தார்.

இதன் பின்னர் சுயசரிதத்தை எழுதிவீர்களா என்ற கேள்விக்கு, “நான் என் சுயசரிதம் எழுதுவேன். அதனால் பல பிரச்னைகள் எழும். பலருக்கு பிரச்னையை உண்டாக்கும். அதனால் சில உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News