Kathir News
Begin typing your search above and press return to search.

சிறிது நேரத்தில் மெரினா கடற்கரை வெடித்து சிதறும்.. 3 முறை எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பீர் முஹம்மதுவை கைது செய்த போலீஸ்.!

சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கோவையில் கைது செய்துள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிது நேரத்தில் மெரினா கடற்கரை வெடித்து சிதறும்.. 3 முறை எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பீர் முஹம்மதுவை கைது செய்த போலீஸ்.!

ThangaveluBy : Thangavelu

  |  26 July 2021 11:40 AM GMT

சென்னை மெரினா கடற்கரையில் இன்னும் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என்று மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கோவையில் கைது செய்துள்ள சம்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை செல்போன் எண் மூலமாக அழைப்பு வந்தது. அப்போது எதிர் முனையில் பேசிய நபர் மெரினா கடற்கரையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். எனவே சிறிது நேரத்தில் அவை வெடித்து சிதறும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் சம்பவம் பற்றி உடனடியாக மெரினா கடற்கரை போலீசாருக்கு கூறியுள்ளனர்.


இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் மோப்ப நாய்கள் உதவியுடன் மெரினா கடற்கரை முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை எனவும், இது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த எண் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பீர் முஹம்மது 41, என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக கோவை போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அடிக்கடி செல்போன் மூலமாக பலருக்கு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் போதையில் பேசினாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா எனவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News