Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக இந்துமத தலைவர்கள் உயிருக்கு ஆபத்து - உளவுத்துறை எச்சரிக்கை பின்னணி என்ன?

தமிழக இந்து மத தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உளவுத்துறை எச்சரிக்கை.

தமிழக இந்துமத தலைவர்கள் உயிருக்கு ஆபத்து - உளவுத்துறை எச்சரிக்கை பின்னணி என்ன?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Oct 2022 5:11 AM GMT

PFI என்று அழைக்கப்படு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு பயங்கரவாத செயலுக்கு துணை போகின்றது என்பது தொடர்பான புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அதிகாரிகள் கடந்த 22 ஆம் தேதி பாப்புலர் பிராண்ட் அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகங்களில் வீடுகளில் சோதனை நேரத்தில் 100க்கும் மேற்பட்டவரை கைது செய்தனர். இதை அடுத்து கேரளாவில் 23ஆம் தேதி நடந்த முழு அடைப்பு கண்டன பேரணியில் வன்முறை அரங்கேறியது.


இந்நிலையில் தமிழகத்தில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக ஐ.எஸ் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி PFI அமைப்பை மத்திய அரசு செப்டம்பர் 28ஆம் தேதி தடை செய்தது அவற்றின் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.


இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உள்ள இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொள்வதற்காக சதி திட்டம் தீட்டப்படுவதாகவும் மத்திய உளவு அமைப்புகள் தகவல்கள் அனுப்பியுள்ளன. இரு மாநிலத்திலும் உள்ள இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்களது வீடுகள் அவர்கள் செல்லும் இடங்கள் ஆகியவற்றில் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: Thanthi News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News