Kathir News
Begin typing your search above and press return to search.

நாங்க செஞ்சா நீ செய்தி போட்ருவியா? - கழிவுநீர் மீது கான்கிரீட் கலவையை கொட்டிய தி.மு.க நிர்வாகி செய்தியாளரை மிரட்டல்!

கழிவுநீரின் மீது கான்கிரீட் போடப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களை மிரட்டிய தி.மு.க நிர்வாகி.

நாங்க செஞ்சா நீ செய்தி போட்ருவியா? - கழிவுநீர் மீது கான்கிரீட் கலவையை கொட்டிய தி.மு.க நிர்வாகி செய்தியாளரை மிரட்டல்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Aug 2022 12:48 AM GMT

கரூரில் தற்போது பாதாள சாக்கடை வரும் தண்ணீரின் மேல் கான்கிரீட் கலவையை கொட்டிய திமுக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக சென்ற செய்தியாளர் ஒருவரிடம் தி.மு.க நிர்வாகி மிரட்டியுள்ளார். செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது? என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார் கரூர் தி.மு.க பிரமுகர் மாரப்பன். அதுமட்டுமல்லாமல் கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொதுமக்களையும் நீங்கள் அவர்களிடம் பேட்டி அளிக்க கூடாது.


Image source: Polimer News

ஏதாவது அவர்களிடம் தற்போது நடக்கும் அவலங்களை பற்றி கூறினீர்கள் என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அதட்டும் தொனியில் மக்களிடம் மிரட்டியுள்ளார். எனவே செய்தி சேகரிப்பாளர் இடம் மற்றும் பொதுமக்களிடம் தகாத வார்த்தை நடந்து கொள்ளும் நபரை தி.மு.க நிர்வாகம் ஏன் கண்டு கொள்ளவில்லை? தகுதியற்ற நபர்களை ஆட்சியில் வைத்து, பொது மக்கள் நலன்களில் அரசு விளையாடுகின்றதா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.


அதன் பின்னர் அங்கு செய்தியாளரிடம் சண்டியர் தனம் செய்த மாரப்பனை கரூர் மேயர் மற்றும் மற்ற தி.மு.க நிர்வாகிகள் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் ஏன்? இத்தகைய செயல்களை அனுபவிக்கிறார்கள் என்பது புரியவில்லை. நிகழ்விடத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை, கரூர் திமுக நிர்வாகி மாரப்பன் பகிரங்கமாக மிரட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Input & Image courtesy:Polimer news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News