Kathir News
Begin typing your search above and press return to search.

சிறைச்சாலையில் விசாரணை கைதி மர்ம சாவு - யார் காரணம்?

மதுரை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்தவர் மர்ம சாவு.

சிறைச்சாலையில் விசாரணை கைதி மர்ம சாவு - யார் காரணம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Aug 2022 1:39 AM GMT

தி.மு.க ஆட்சியின் பல்வேறு லாக்கப் மரணங்கள் குறிப்பாக இதுவரை எட்டிற்கு மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தற்போது, மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதியாகி இருந்த ஒரு நபர் மர்மமான முறையில் இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அலிசேட் என்ற 63 வயதான நபர் தான் தற்போது இறந்து இருக்கிறார்.


இவருக்கு சிறைச்சாலையில் இருக்கும் பொழுது மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் அருகில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு இவர் பரிதாபமாக இருந்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை மற்றும் மூச்சு திணறல் பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதனால் நேற்று காலை மூச்சு திணறல் பிரச்சனை அதிகமாக இருந்த காரணத்தினால் இவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மேலும் இவர் இறப்பிற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் தற்போது நடத்தி வருகிறார்கள்.

Input & Image courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News