Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த 4 மாவட்டத்தில்.. சில மணி நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு.!

இந்த 4 மாவட்டத்தில்.. சில மணி நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு.!

இந்த 4 மாவட்டத்தில்.. சில மணி நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Jan 2021 5:03 PM GMT

அடுத்து வருகின்ற 3 மணி நேரங்களில் இந்த 4 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேலாக மழை கொட்டித்தீர்த்தது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் தற்போது 2 நாட்களாக தொடர் கனமழையால் மீண்டும் வெள்ளக் காடாக மாறியது.

சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டது. நேற்று முதல் சற்று இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்து வருகின்ற 3 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News