முதல்வர் நிகழ்ச்சிக்கு விலங்குகள் போன்று மக்களை அடைத்து அழைத்து வரும் தி.மு.க நிர்வாகிகள் - திருப்பத்தூர் கொடுமை!
திருப்பத்தூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண மக்களை விலங்குகள் போல் வாகனத்தில் அடைத்து வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
By : Mohan Raj
திருப்பத்தூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண மக்களை விலங்குகள் போல் வாகனத்தில் அடைத்து வரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வருகையை காணவும் அவர் இன்று பங்கேற்கும் நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளவும் நூற்றுக்கணக்கான மக்கள் அபாயகரமான முறையில் திறந்த வேன்களில் அடைத்து ஏற்றி வரப்படுகின்றனர், இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் 110 கோடி ரூபாய் நிதியில் இப்போது ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. அதனை திறந்து வைக்கவும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பயணிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி என திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை புரிகிறார்.
முதல்ல ஸ்டாலின் வருகிறார் என்ற காரணத்திற்காக திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திமுக கொடிகளை கட்டி அடைத்து வைத்து அடைத்து கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறு ஆபத்தான பயணம் மேற்கொள்வது மனித உரிமை மீறிய செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் முதல்வர் திருப்திப்படுத்த அங்குள்ள தி.மு.க நிர்வாகிகள் இதுபோன்று செய்வது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.