Kathir News
Begin typing your search above and press return to search.

வரி ஏய்ப்பு புகார்: எம்.ஜி.எம். குழுத்தில் ஐடி ரெய்வு.. 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையால் பரபரப்பு!

வரி ஏய்ப்பு புகார்: எம்.ஜி.எம். குழுத்தில் ஐடி ரெய்வு.. 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையால் பரபரப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2022 1:31 AM GMT

பொழுதுபோக்கு பூங்கா, நட்சத்திர விடுதி மற்றும் மதுபான தயாரிப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் பிரபல எம்.ஜி.எம். குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனை பற்றி வெளியான முதற்கட்ட தகவலின்படி எம்.ஜி.எம். குழுமத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, திண்டிவனம், காஞ்சிபுரம், நெல்லை மற்றும் கர்நாடக மாநிலமான பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான 40க்கும் அதிகமான இடங்களில் இன்று (ஜூன் 15) காலை முதலே சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கைப்பற்றப்படும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News