Kathir News
Begin typing your search above and press return to search.

உளவுத்துறை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! என்ன எச்சரிக்கை?

உளவுத்துறை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! என்ன எச்சரிக்கை?

ThangaveluBy : Thangavelu

  |  10 Jan 2022 11:02 AM GMT

ராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தற்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகவும் முக்கியமான கோயில்களில் ராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயிலும் ஒன்றாகும். அதுபோன்று ஏற்கனவே இராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோயிலின் நான்கு வாசல் பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், நான்கு ரத வீதிகளின் வழியாக முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இராமநாத சுவாமி கோயிலுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர வாய்ப்பு உள்ளது என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தற்போது கூடுதல் போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலவி வருகிறது.

Source, Image Courtesy: News 7 Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News