Begin typing your search above and press return to search.
போதையில் ஆசிரியரை அடித்த மாணவன் - அரசு பள்ளியில் நடந்த கொடுமை
அரசு பள்ளித் தலைமை ஆசிரியரை போதையில் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
By : Mohan Raj
அரசு பள்ளித் தலைமை ஆசிரியரை போதையில் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளை கேலி செய்ததாக புகார் வந்ததையடுத்து மாணவனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கண்டித்தார். இதனால் கோபத்துடன் பள்ளியை விட்டு வெளியே சென்ற மாணவன் மது அருந்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு வந்ததால் தலைமை ஆசிரியர் அழைத்து எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவன் தாக்கியதில் பின்தலையில் காயமடைந்த தலைமை ஆசிரியர் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். போதையில் பள்ளி ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதுபோன்ற போதையினால் சீரழிவது குறித்தும் தமிழக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
Next Story