Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் பரிதாபம்: பாலம் இல்லாததால் தண்ணீரில் மூதாட்டி சடலத்தை தூக்கிச்சென்ற உறவினர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முழங்கால் அளவிலான தண்ணீரில் இறங்கி மூதாட்டியின் சடலத்தை உறவினர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பரிதாபம்: பாலம் இல்லாததால் தண்ணீரில் மூதாட்டி சடலத்தை தூக்கிச்சென்ற உறவினர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Nov 2021 4:14 AM GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முழங்கால் அளவிலான தண்ணீரில் இறங்கி மூதாட்டியின் சடலத்தை உறவினர்கள் தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அருகே உள்ள சேசலூரில் இருந்து பாலப்பட்டி வழியாக வடக்கு அம்மாபட்டி, தேக்கமலை கோயில் ஆகிய இடங்களுக்கு பெரியாறு வாய்க்கால் வழியாகத்தான் பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். மேலும், சரியான தார் சாலை இல்லாத காரணத்தினால் சேறும் சகதியும் நிறைந்த தண்ணீரில் ஏறி செல்ல வேண்டும்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 29) உயிரிழந்த பழனிசாமி என்பவரின் மனைவி வெள்ளையம்மாளுக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக வந்திருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தண்ணீரில் தட்டுத்தடுமாறி மூதாட்டியின் சடலத்தை தூக்கிச் சென்றனர். உடனடியாக சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News