Kathir News
Begin typing your search above and press return to search.

குப்பைக்கு சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை.. பெண்ணின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு கிடைத்தது.!

குப்பைக்கு சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை.. பெண்ணின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு கிடைத்தது.!

குப்பைக்கு சென்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை.. பெண்ணின் நீண்ட போராட்டத்திற்கு பின்பு கிடைத்தது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Nov 2020 7:35 AM GMT

பண்டிகை காலம் என்றாலே வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். அப்படி தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்வதாகக் கூறி ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை குப்பையில் வீசிய பெண் பல போராட்டங்களை கடந்து மீண்டும் நகையை மீட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதாகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரேகா செலுகார். இவர் தீபாவளியை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பழைய பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வீசும்போது நீண்ட நாட்களாக கிடந்த ஒரு பழைய ஹேண்ட் பேக்கையும் தூக்கி போட்டுள்ளார்.

வீசிய சில மணி நேரங்கள் கழித்துதான் அதில் காலம் காலமாக பாதுகாத்து வைத்திருந்த மாங்கல்யம், வெள்ளி கொலுசு உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை அந்த பையில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

உடனே சஞ்சய் குட்டே என்ற உள்ளூர் சமூக சேவகரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். உடனே அவர் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் பின்னர் ரேகாவின் குடும்பத்தின் குப்பைக் கொட்டும் கிடங்கிற்கு சென்றிருக்கின்றனர்.

அங்கிருந்த ஊழியர்கள் குப்பையை சுமந்து சென்ற வாகனத்தை சோதனையிட சென்றபோதுதான் அனைத்து குப்பைகளையும் கிடங்கிற்கு கொண்டு சென்றது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கொடுத்த தகவலின்பேரில், கிடங்கில்தான் நகை இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து அங்கு சென்று தேடிய பொழுது அந்த ஹேண்ட் பேக் கிடைத்திருக்கிறது. இதன் பின்னர் ரேகாவின் குடும்பத்தினர் சுகாதாரத்துறையினருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News