Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளக்குறிச்சி: பிரசவத்திற்காக ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணி உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு.!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ளது புதுப்பட்டி கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி ஜெயலட்சுமி 23, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: பிரசவத்திற்காக ஆம்புலன்சில் சென்ற கர்ப்பிணி உட்பட 3 பேர் விபத்தில் உயிரிழப்பு.!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jun 2021 3:28 AM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ளது புதுப்பட்டி கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி ஜெயலட்சுமி 23, நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜெயலட்சுமியை அழைத்து சென்றனர். அப்போது அவருடன் மாமியார் மற்றும் அவரது நாத்தனார் உட்பட 3 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆம்புலன்ஸை கலியமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மருத்துவ உதவியாளர் மீனா என்பவரும் ஆம்புலன்ஸில் இருந்துள்ளார். இதனிடையே கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆலத்தூர் ஏரிக்கரை அருகே ஆம்புலன்ஸின் டயர் வெடித்து, மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.





இந்த விபத்தில் கர்ப்பிணி ஜெயலெட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து விபத்தை பார்த்தவர்கள் உடனடியாக மாற்று வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வழியிலேயே ஜெயலட்சுமியின் மாமியார் செல்வி மற்றும் நாத்தனார் ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News