Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய மக்கள் நீதிமன்றம் தொடங்கிய மாவட்ட நீதிபதி!

காஞ்சிபுரத்தில் முதல் முறையாக தேசிய மக்கள் நீதிமன்றம் தொடங்கிய மாவட்ட நீதிபதி.

தேசிய மக்கள் நீதிமன்றம் தொடங்கிய மாவட்ட நீதிபதி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Aug 2022 2:42 AM GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நீதிபதிகள் இருந்தாலும் குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் பிற தொடர்பான வழக்குகளில் வாதாடுவதற்கு அங்கு தனிப்பட்ட வகையில் தேசிய மக்கள் நீதிமன்றம் இல்லாதது பெரும் குறையாகவே மக்களிடமிருந்து வந்தது. அந்த குறையை தற்போது நிவர்த்தி செய்யும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தனித்தனியாக தற்போது மக்கள் நீதி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.


மேலும் நீதிமன்றம் தொடங்கப்பட்ட ஒரு நாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் வந்துள்ளது குறிப்பாக தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனை மக்களுக்கு ஏற்படும் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எனவே தற்போது தேசிய மக்கள் நீதிமன்றம் தொடங்கப்படும் அந்தந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எடுக்கப்பட்டு உள்ளது.


காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி எம் இளங்கோவன் தொடங்கி வைத்தார். மேலும் இது குறித்து நீதிபதி கூறுகையில், "மக்கள் நீதிமன்றம் என்பது முழுமையாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் மூலம் தொடங்கப்படும். இது மற்றும் ஆகும் இதில் உடனடியாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிப்பது மிகவும் முக்கியம்" என்று கூறினார்.

Input & Image courtesy: DD News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News