Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடக குண்டு வெடிப்பு - நாகர்கோவிலில் உள்ள அசாம் இளைஞரிடம் தீவிர விசாரணை

கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற தீவிரவாத குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கர்நாடக குண்டு வெடிப்பு - நாகர்கோவிலில் உள்ள அசாம் இளைஞரிடம் தீவிர விசாரணை
X

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2022 12:21 PM IST

கர்நாடகா மங்களூரில் நடைபெற்ற தீவிரவாத குண்டு வெடிப்பு தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு கர்நாடக மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் தங்கி இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம் ரகுமான் என்ற இளைஞரை கோட்டாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது கைபேசியில் இருந்து அழைப்புகள் மற்றும் கைபேசிக்கு வந்த அழைப்புகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் போலீசார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Source - Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News