Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் KKSSR மீது வழக்கு பதிவு - தீண்டாமை குற்றத்திற்காக நடவடிக்கை

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீது வழக்கு பதிவு தீண்டாமைக் குற்றத்திற்காக கொடுக்கப்பட்ட புகார்.

அமைச்சர் KKSSR மீது வழக்கு பதிவு - தீண்டாமை குற்றத்திற்காக நடவடிக்கை

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Sep 2022 1:49 AM GMT

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மீது தீண்டாமை குற்றம் காரணமாக குயவர் சமுதாய மக்கள் சார்பாக தலைவர் தற்போது புகார் ஒன்றை அளித்துள்ளார். வன வேங்கைகள் கட்சித் தலைவர் இரணியன் என்பவர் தான் குயவர் சமுதாய மக்கள் சார்பாக அப்பொழுது வருவாய் துறை அமைச்சர் மீது தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று தாக்கல் செய்துள்ளார். எனவே வருவல் துறை அமைச்சர் தீண்டாமை ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது உரையை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.


தற்போது குடியரசு சமுதாய பிரச்சனைகளை தமிழக அரசுக்கு பிரதிநிதித்துவம் படுத்தும் விதமாக உண்ணாவிரதம் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தங்கள் ஏற்பாடு செய்வதாக இருந்தோம். அதற்காக தங்களுக்கு ஆதரவை தருமாறு வருவாய் துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு 23ம் தேதி அன்று சென்றிருந்தோம். அப்பொழுது தங்களை சந்தித்த அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தங்களை நிற்க வைத்த பேசினார். தங்களுக்கு உட்கார கூட இடம் தரவில்லை.


அவருடைய வீட்டில் பின்பு அவரிடம் மனுவை அளித்த பிறகு மனுவின் உடைய முக்கிய சாராம்சத்தை கூறுவதற்காக அவருடைய அருகில் சென்ற பொழுது "சிறிது தள்ளியே நின்று பேசு" என்று ஒருமையில் அவரை திட்டி இருக்கிறார். இவ்வாறு வன வேங்கைகள் கட்சித் தலைவர் ரணியின் அவர் தன்னுடைய புகாரில் கூறியிருக்கிறார். எனவே தீண்டாமையை பயன்படுத்தி தன்னுடைய ஜாதி காரணமாக தனக்கு இந்த நிலையை அவர் ஏற்படுத்துகிறார். தீண்டாமை குற்றத்திற்காக அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக அவர் புகார் கொடுத்துள்ளார்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News