சுற்றுலா தளங்களுக்கு தடை விதிப்பு: கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு.!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா தளங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது இதனையடுத்து கொடைக்கானலில் வணிகர்கள் சங்கம் சார்பில் கடை கடை அடைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, தினமும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்த காரணத்தினால் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் இரவு நேர ஊரடங்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை உள்ளிட்டவை இந்த புதிய அறிவிப்பில் இடம்பெற்றது.
இந்நிலையில், சுற்றுலா தளங்களுக்கு தடை விதித்ததால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகளை நம்பியே ஏராளமான வணிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை நம்பி கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் முதல் சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் வாழ்வாதாரம் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இல்லை என்றால் எங்களுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.