Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை: மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை: மாவட்ட ஆட்சியர் தகவல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  22 May 2021 2:24 PM IST

கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். கோவை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக கருப்பு பூஞ்சை என்ற தொற்று பரவியுள்ளது. இந்த தொற்றுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். எனவே இது அபாயகரமான தொற்றாக உள்ளது என்றும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News