Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் - பள்ளி மாணவர்கள் பாதை எங்கே செல்கிறது?

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் - பள்ளி மாணவர்கள் பாதை எங்கே செல்கிறது?

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2022 1:20 PM GMT

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மாணவன் தாலி கட்டியும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது திப்பசந்திரம் என்ற கிராமம். அங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்ற மாணவன் ஒருவன் தனது வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வகுப்பறையிலேயே கடந்த 23ம் தேதி தாலி கட்டியுள்ளான். இந்த காட்சியினை அதில் இருந்த சக நண்பர்கள் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துள்ளனர். தற்போதுதான் அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி கேட்டு தலைமை ஆசிரியரிடம் முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாணவி மற்றும் மாணவனை அழைத்து தலைமை ஆசிரியர் எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார். தற்போதைய நிலையில் தேர்வுகள் தொடங்கும் நிலையில் மாணவர்கள் தவறான முடிவுகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு சில மாதங்களாக வகுப்பறையில் ஆசிரியர்களிடம் வம்பு இழுப்பது, அல்லது சாலையில் சண்டை போட்டுக்கொள்வது போன்ற ஒழுகீனமான செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது. தற்போதைய நிலையை பார்க்கும்போது தமிழகம் மீண்டும் பின்னோக்கி நகர்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மாணவர்கள் நல்ல கருத்தினை உள்வாங்கி செயல்பட்டால் அனைவருக்கும் நல்லது.

Source, Image Courtesy: Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News