Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த, நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த, நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  21 Sep 2021 7:27 AM GMT

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்க மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிலம் இல்லாத ஏழைகளை கண்டுப்பிடித்து அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என்று பிரதம மந்திரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்துமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக குழுவை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மாதங்களுக்குள் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: News 7 Tamil

Image Courtesy:Twiter


Next Story
கதிர் தொகுப்பு
Trending News