Kathir News
Begin typing your search above and press return to search.

மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

ThangaveluBy : Thangavelu

  |  26 Nov 2021 3:36 AM GMT

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போதைய நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிவகங்கை, மதுரை, திருச்சி, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News