Kathir News
Begin typing your search above and press return to search.

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி.. தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.!

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி.. தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.!

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி.. தமிழகம் வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Feb 2021 10:25 AM GMT

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10ம் தேதி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனால் அனைத்து தேர்தல் வேலைகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதனிடையே வாக்குச்சாவடி அமையும் இடங்கள் மற்றும் பதற்றமானவை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காகவும், தேர்தலை சிறந்த முறையில் நடத்தி முடிப்பதற்காகவும் தமிழகத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பிப்ரவரி 10ம் தேதி வருகை தருகிறார்.

தமிழகத்தில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது. இந்து ஆலோசனை நடைபெற்ற பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது இருந்தே தமிழகத்தில் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News