Kathir News
Begin typing your search above and press return to search.

உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும்.. முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து.!

உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும்.. முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து.!

உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும்.. முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Jan 2021 12:28 PM GMT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கால்நடைகளை நீரால் குளிப்பாட்டி, அதற்கு வண்ணங்கள் பூசி பொட்டு வைத்து, புதிய பானைகளில் வைத்த பொங்கலை மாடுகளுக்கு வைத்து படையல் போடுவது கிராமத்தின் பாரம்பரியம் ஆகும். இத்தகைய மகிழ்ச்சியான நாளில் கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் பண்டிகையின்போது உழவர்கள் அனைவரும் தங்களின் கால்நடைகளை பூஜை செய்து வழிப்படுவார்கள்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்: “உழவனின் உற்ற நண்பனாய், நம் தாய்த்தமிழ் மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News