Kathir News
Begin typing your search above and press return to search.

கள்ளச்சாராய செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு மிரட்டல் விடுக்கும் தி.மு.க ஆதரவு சாராய வியாபாரிகள் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கள்ளச்சாராய செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு மிரட்டல் விடுக்கும் தி.மு.க ஆதரவு சாராய வியாபாரிகள் !

ThangaveluBy : Thangavelu

  |  13 Aug 2021 8:47 AM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் உள்ள வானவரெட்டி, திம்மாபுரம் உள்ளிட்ட கிராமங்களிலும், கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள கரடி சித்தூர், மாத்தூர், உள்ளிட்ட கிராமங்களிலும் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளரை திமுக ஆதரவு வியாபாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அது மட்டுமின்றி செய்தி சேகரிக்க விடாமல் அவரின் செல்போன் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை சாராய வியாபாரி வேலு மற்றும் அவரது உறவினர்கள் பிடுங்கி வைத்துக்கொண்டு, ஆபாசமாக திட்டியுள்ளனர்.

மேலும், திமுக எம்.எல்.ஏ., உதயசூரியன் வருகிறார் அதுவரை நீ எங்கேயும் போகக்கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஊர் மக்கள் ஒன்றாக கூடியுள்ளனர். அப்போது செய்தியாளரின் செல்போனை சாராய வியாபாரிகள் திருப்பி கொடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நியூஸ் ஜெ செய்தியாளர் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Source: News J

Image Courtesy: News J

https://www.newsj.tv/view/Liquor-dealers-threaten-'News-J'-reporter-who-went-to-collect-news-45021

Next Story
கதிர் தொகுப்பு
Trending News