Kathir News
Begin typing your search above and press return to search.

கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் 6 நாட்கள் மாற்றம்.!

தாம்பரம் செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணியானது தொடங்க உள்ளதால் 6 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம் இருக்கிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

கடற்கரை செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் 6 நாட்கள் மாற்றம்.!

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2021 3:55 AM GMT

தாம்பரம் செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை அமைக்கும் பணியானது தொடங்க உள்ளதால் 6 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம் இருக்கிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை அமைக்கும் பணி நாளை 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.




எனவே சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும், தாம்பரத்தில் இருந்து 3.55 மணி முதல் இரவு 11.59 மணி வரையிலும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் 80 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்.





இந்த புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை நாளை முதல் 19-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News