Begin typing your search above and press return to search.
தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு.!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

By :
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இதனையடுத்து மருத்துவ குழுவினர் மேலும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், வருகின்ற ஜூன் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
Next Story