Kathir News
Begin typing your search above and press return to search.

மலேசிய பெண்ணுக்கு தூண்டில் போட அருண்குமாரான இம்ரான்! 6 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு துபாய் ஓட்டம்!

மலேசிய பெண்ணுக்கு தூண்டில் போட அருண்குமாரான இம்ரான்! 6 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு துபாய் ஓட்டம்!

MuruganandhamBy : Muruganandham

  |  30 April 2022 1:59 AM GMT

மலேசிய தமிழ் பெண்ணை, நெல்லை சிக்கந்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இம்ரான் மலேசியாவில் வேலை பார்த்த போது, பெண்ணிடம் அறிமுமாகி பின்னர் பேஸ்புக் மூலம் பழகினார். தான் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறியதோடு தனது பெயர் அருண்குமார் எனவும் கூறினார். ஆனால் அவரிடம் பழகிய பிறகுதான் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை அந்தப்பெண் கண்டறிந்துள்ளார்.

பிறகு இந்து மதத்திற்கு மாறியதாக கூறி போலியான சான்றிதழ்களை காண்பித்து நம்பவைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் வேலை இருப்பதாக கூறி அந்தப்பெண்ணை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார்.

தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ள அந்தப்பெணை பணத்திற்காக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி, அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார்.

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் கர்ப்பிணியாக தவிக்கும் அந்தப்பெண் தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தன்னிடம் 14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும், தன்னைப் போன்று பல பெண்கள் அவரிடம் ஏமாந்திருப்பதால் இம்ரானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Inputs From: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News