Kathir News
Begin typing your search above and press return to search.

அரசை கண்டித்து மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்!

அரசை கண்டித்து மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்!

ThangaveluBy : Thangavelu

  |  30 May 2022 8:37 AM GMT

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று (மே 30) முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் 4,500 பேர், பொறியியல் பிரிவு ஊழியர்கள் 1,500 பேர் என்று மொத்தம் 6,000 ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலியுறுத்தியபடி 7வது ஊதிய குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இப்போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News