Kathir News
Begin typing your search above and press return to search.

விடியல் பரிதாபம்: ஒவ்வொரு மாதமும் போராட்டம் நடத்திய பின்னரே சம்பளமாம் ! 3வது நாளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் !

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பாக 3வது நாளாக பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விடியல் பரிதாபம்: ஒவ்வொரு மாதமும் போராட்டம் நடத்திய பின்னரே சம்பளமாம் ! 3வது நாளாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் போராட்டம் !

ThangaveluBy : Thangavelu

  |  13 Oct 2021 12:49 PM GMT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பாக 3வது நாளாக பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை நாகமலை, புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் 350க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதமும் போராட்டம் நடத்திய பின்னரே தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பளம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதமும் நிதி இல்லை பல்கலைக்கழகம் கூறியது மட்டுமின்றி பழைய சம்பளமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சி மாறினால் விடியல் வரும் எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு நாமமே கிடைத்ததாக பலரும் விமர்சனம் செய்து வருவதை காணமுடிகிறது.

Source, Image Courtesy: News 7 Tamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News