Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த மழைநீர்! நோயாளிகள் கடும் அவதி !

மதுரை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மதுரை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த மழைநீர்! நோயாளிகள் கடும் அவதி !

ThangaveluBy : Thangavelu

  |  18 Sep 2021 5:06 AM GMT

மதுரை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் ஓடியது.

இந்நிலையில், மதுரை, பைக்கராவில் உள்ள மாநகராட்சி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து புகுந்ததால் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Source, Image Courtesy: Polimer


Next Story
கதிர் தொகுப்பு
Trending News