Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா பரவலுக்கு யார் காரணம்? முதல் அலையின் போது வெளியிட்ட வீடியோவுக்கு மாரிதாஸ் 3வது வழக்கில் கைது!

கொரோனா இந்தியாவில் பரவிய காலக்கட்டத்தில் தமிழகத்தில் தொற்று அதிகரித்தது. அதற்கு ஒரு கும்பல்தான் காரணம் என்று மாரிதாஸ் வெளிப்படையாக பேசியிருந்தார். அந்த வீடியோ பேசி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவலுக்கு யார் காரணம்? முதல் அலையின் போது வெளியிட்ட வீடியோவுக்கு மாரிதாஸ் 3வது வழக்கில் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  16 Dec 2021 9:17 AM GMT

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின்போது பிரபல யூடியூபர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கொரோனா பரவலுக்கு யார் காரணம் என்று மிகத் தெளிவாக பேசியிருந்தார். அந்த வீடியோ பேசியதற்காக தற்போது 3வது வழக்காக சேர்க்கப்பட்டு மீண்டும் மாரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்கவும் நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா இந்தியாவில் பரவிய காலக்கட்டத்தில் தமிழகத்தில் தொற்று அதிகரித்தது. அதற்கு ஒரு கும்பல்தான் காரணம் என்று மாரிதாஸ் வெளிப்படையாக பேசியிருந்தார். அந்த வீடியோ பேசி கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகும் என கூறப்படுகிறது.

அந்த வீடியோவுக்கு தற்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கில் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை தேனி சிறையில் கைது செய்யப்பட்டு, நெல்லை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 5ல் ஆஜர்படுத்தப்பட்டார் மாரிதாஸ். இதனால் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: The New Indian Express


Next Story
கதிர் தொகுப்பு
Trending News