Kathir News
Begin typing your search above and press return to search.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு.!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று - தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்.. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு.!

ThangaveluBy : Thangavelu

  |  16 March 2021 10:14 AM GMT

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று - தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய தலைமைச்செயலாளர் "பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாமல் விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது அபராதம் விதிப்பது கட்டாயம். தமிழகத்தில் மீண்டும் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உயர்கிறது.





அதே நேரத்தில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்களை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News