Kathir News
Begin typing your search above and press return to search.

10 வகுப்பு மாணவியை காதலிப்பதாக வற்புறுத்திய கணித ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது!

பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

10 வகுப்பு மாணவியை காதலிப்பதாக வற்புறுத்திய கணித ஆசிரியர் - போக்சோ சட்டத்தில் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  12 Sep 2022 9:06 AM GMT

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் என்பவர் இவர் தனியார் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் அந்த பள்ளியில் உரிமையாளரின் உறவினர் இவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தினேஷ் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் கணித ஆசிரியரை பலமுறை கண்டித்தும் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த மாணவியை போனிலும், நேரிலும் தன்னை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.


இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தங்களின் மகளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். இருப்பினும் தினேஷ் தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் இதில் அந்த மாணவி ஆசிரியரை காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது, இந்த சம்பவம் குறித்து மாணவியரின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் ஜெயகொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் தினேஷை கைது செய்தார்.


மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமிக்கு தற்போது காதலிக்க வற்புறுத்திய கூறிய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளியில் இது போன்ற அக்கிரமங்கள் நடக்குவதால் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News