Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூர்: பேய் விரட்ட மசூதியில் விட்ட இந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை! அப்துல்கனி போலீசில் ஒப்படைப்பு!

கடலூர்: பேய் விரட்ட மசூதியில் விட்ட இந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை! அப்துல்கனி போலீசில் ஒப்படைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  26 March 2022 5:20 AM GMT

கடலூர் மாவட்டத்தில் பேய் பிடித்துள்ளதாக கூறி மசூதியில் விட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகாமையில் உள்ளவர்கள் பெண்ணுக்கு பேய் பிடித்திருக்கலாம் என கூறியுள்ளனர். பேய் விரட்ட வேண்டும் என்றால் மசூதிக்கு அழைத்து செல்லுங்கள் என சுற்று வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய உறவினர்கள் இளம்பெண்ணை பெண்ணாடத்தில் உள்ள மசூதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மசூதி நிர்வாகி அப்துல்கனி 54, என்பவர் பெண்ணை உள்ளே அழைத்து சென்று பேய் விரட்டுவதாக கூறி உறவினர்களை வெளியில் அனுப்பி வைத்துவிட்டு, பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். இதனை கவனித்த உறவினர்கள் உனடியாக பெண்ணை மீட்டு அப்துல்கனியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Hindu Tamil

Image Courtesy: The commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News