Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவர்கள் இல்லாத கிராமத்தில் சர்ச் கட்ட அடிக்கல்: கிராம மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு!

கிறிஸ்தவர்கள் இல்லாத கிராமத்தில் சர்ச் கட்ட அடிக்கல்: கிராம மக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  12 Jan 2022 6:56 AM GMT

கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட இல்லாத கிராமத்தில் திடீரென்று சர்ச் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதற்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழிச்சாலையில் அருகே அமைந்துள்ள பணமங்கலம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் சர்ச் கட்டுவதற்கான பணிகளை கிறிஸ்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட இல்லாத கிராமத்தில் எதற்காக சர்ச் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட வந்ததால் கிராம மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாஜக மற்றும் இந்து முன்னணியினரும் அந்த இடத்திற்கு சென்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இந்துக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது சட்ட ரீதியாக சர்ச் கட்டுவதை எதிர்த்து போராட வேண்டும் எனவே தற்போது அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News