Begin typing your search above and press return to search.
சென்னையில் 28ம் தேதி இறைச்சி கடைகள் இயங்காது.. மாநகராட்சி உத்தரவு.!
சென்னையில் 28ம் தேதி இறைச்சி கடைகள் இயங்காது.. மாநகராட்சி உத்தரவு.!
By : Kathir Webdesk
வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் வருகின்ற 28ம் «தி இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற ஜனவரி 28ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் வருகிறது. இதனையொட்டி மாநகராட்சியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் அரசு உத்தரவுபடி மூடப்படுகிறது.
இதேபோன்று ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், ஷாப்பிங் மாலில் பதப்படுத்திய இறைச்சிகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த உத்தரவுக்கு அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story