Kathir News
Begin typing your search above and press return to search.

தீபாவளி எதிரொலி: மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதனால் வெளியூர் செல்ல உள்ள பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை (நவம்பர் 2, 3ம் தேதி) நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி எதிரொலி: மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  1 Nov 2021 8:18 AM GMT

தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதனால் வெளியூர் செல்ல உள்ள பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை (நவம்பர் 2, 3ம் தேதி) நாளை மற்றும் நாளை மறுநாள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாளான புதன்கிழமை (03.11.2021) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.

கூட்டம் அதிகமாக உள்ள மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02.11.2021) மற்றும் நாளை மறுநாள் (03.11.2021) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சேவைகள் நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News