அமைச்சர் ஏ.வ.வேலு அவர் ஊரை தூக்கி விமான நிலையம் அமைக்க கொடுப்பாரா? - பரந்தூர் மக்கள் ஆவேசம்!
'இதே அமைச்சர் ஏ.வ.வேலு தனது ஊரான தண்டராம்பட்டு ஊரை தூக்கி விமான நிலையம் அமைக்க கொடுப்பாராக' என பரந்தூர் கிராம மக்கள் கோபத்துடன் கொந்தளிப்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
By : Mohan Raj
'இதே அமைச்சர் ஏ.வ.வேலு தனது ஊரான தண்டராம்பட்டு ஊரை தூக்கி விமான நிலையம் அமைக்க கொடுப்பாராக' என பரந்தூர் கிராம மக்கள் கோபத்துடன் கொந்தளிப்பாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி 3 கிராம மக்களும் 75 நாட்களை கடந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறன்று பூவுலகு நண்பர்கள் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து பேசிய இந்த போராட்டம் குறித்து பேசிய ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணி கூறும் பொழுது, 'இந்தியாவில் மது பொருட்களுக்கு இருக்கும் பாதுகாப்பு விவசாயப் பொருட்களுக்கு இல்லை மதுபாட்டில் பாதுகாப்பாக கையாளப்படுகிறது செய்யப்படுகிறது. அதே சமயம் வேளாண் பொருட்கள் திறந்தவெளி இடங்களில் பராமரிப்பின்றி கிடக்கிறது. அரசு பரந்தூர் விமலா நிலையத்தின் மூலமாகத்தான் வளர்ச்சியை கொண்டுவரதாக பெருமைப்பட்டு கொள்கிறது.
பரந்தூர் விமான நிலையம் வந்தால் 13 க்கும் மேற்பட்ட ஏரிகள், 35 ஓடைகள், 15 குளங்கள் மேலும் மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நன்செய், புன்சிய் நிலங்கள் பாதிக்கும். எங்கள் நிலத்திற்கு மூன்று மடங்கு பணம் தருவதாக அரசு கூறியிருந்தால் அந்த பணத்தை கொண்டு பக்கத்து கிராமத்தில் ஒரு நிலம் கூட வாங்க முடியாது எங்களை பொறுத்தவரை அரசு பரந்தூர் விமானத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தார். மேலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு அமைச்சர் ஏ.வ.வேலு அவர் ஊரை இருந்தால் தூக்கிக் கொடுப்பாரா? என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.