Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச் நடத்தும் பள்ளியில் பல கோடி கொள்ளையடிக்கிறார்கள்: பாதிரியார் மோகன் சி லாசர்ஸ் பரபரப்பு பேச்சு!

சர்ச் நடத்தும் பள்ளிகளில் பல கோடி ரூபாய் அளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ பாதிரியார் மோகன் சி லாசர்ஸ் பரபரப்பாக கூறியுள்ளார்.

சர்ச் நடத்தும் பள்ளியில் பல கோடி கொள்ளையடிக்கிறார்கள்: பாதிரியார் மோகன் சி லாசர்ஸ் பரபரப்பு பேச்சு!

ThangaveluBy : Thangavelu

  |  22 Jan 2022 9:08 AM GMT

சர்ச் நடத்தும் பள்ளிகளில் பல கோடி ரூபாய் அளவிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ பாதிரியார் மோகன் சி லாசர்ஸ் பரபரப்பாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பேசும்போது, ஊழல் சர்ச்சியில் இருக்கிறதா இல்லை என்றார். இது உண்மைதான் இதனை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேலும், நான் சபை தலைவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் கமிட்டியின் தலைவராக உள்ளார்.

ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் மிச்சம் ஆகிறது. அனைத்து செலவுகளையும் கடந்து இவ்வளவு பணம் மிச்சம் ஆகிறதே. அப்போது இத்தனை ஆண்டுகால பணம் எங்கே போனது. யார் சாப்பிடறது. அது ஒரு சர்ச்சின் சபை தலைவர் கூறியுள்ளார். எனவே பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடிப்பவர்கள் சர்ச்சிக்குள் உள்ளார்கள். எனவே சர்ச்சிக்குள் இருக்குள் ஊழல் ஒழிந்தால்தான் நாட்டிற்குள் ஊழல் ஒழியும்.

மேலும், பணக்காரன் கூட சர்ச்சியில் நுழைந்து கொள்ளையடிக்கிறார்கள். இது அனைத்து சர்ச்சிகளிலும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசும் வீடியோவில் உள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News