Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை: பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து சிறுமியை கொன்ற நாகூர் அனிபா அதிரடி கைது!

மதுரை: பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து சிறுமியை கொன்ற நாகூர் அனிபா அதிரடி கைது!

ThangaveluBy : Thangavelu

  |  6 March 2022 12:59 PM GMT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து கொன்ற நாகூர் அனிபா என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் மேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் மகன் நாகூர் அனிபா என்ற வாலிபரும் காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியை அவர்தான் எங்கேயாவது அழைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாகூர் அனிபா தனது நண்பர் வீட்டுக்கும் சித்தப்பா வீட்டுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் போலீசார் தேடுவதை அறிந்த நாகூர் அனிபா சிறுமிக்கு எலி பேஸ்ட் கொடுத்துள்ளார். அதனை நாகூர் அனிபாவும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நாகூர் அனிபா துப்பிவிட்டதாகவும், சிறுமிக்கு ஈரோட்டில் உள்ள ஒரு களினிக்கில் மருத்துவம் பார்த்துள்ளார். இதன் பின்னர் நாகூர் அனிபா அவரது தாயார் மதினாபேகத்திடம் கடந்த 3ம் தேதி சிறுமியை ஒப்படைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

சிறுமி மயக்கம் நிலையில் இருந்த அவரை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு காரணமாக இருந்த நாகூர் அனிபா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Freepik

Next Story
கதிர் தொகுப்பு
Trending News