Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: நீதி கேட்டு போராடும் இந்து முன்னணியினர் கைது!

மதுரையில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை: நீதி கேட்டு போராடும் இந்து முன்னணியினர் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  7 March 2022 9:53 AM GMT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 17வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விஷம் வைத்து கொன்ற நாகூர் அனிபா என்ற இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமியின் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் உரிய அனுமதி கொடுக்காமல் கைது செய்துள்ளது. இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்கவும் அதற்கு காரணமான இன்னும் பலரை கைது செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News