Begin typing your search above and press return to search.
பல கோடி வரிஏய்ப்பு! கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமானவரித்துறை சோதனை!
பல கோடி வரிஏய்ப்பு! கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருமானவரித்துறை சோதனை!
By : Kathir Webdesk
கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளது. இவர் அரசுக்கு தெரியாமல் பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் அளவிற்கு வரிஏய்ப்பு செய்துள்ளது தெரியவரும் என கூறப்படுகிறது.
பால்தினகரன் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் நாடு முழுவதும் தனது கிறிஸ்தவ மதத்தினை வளர்த்து வந்தவர். இது போன்று பல மதபிரசாரங்களை நடத்தி அதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story