தனியாக உள்ள பெண்கள் மட்டும் குறி! மயக்க மருந்து தூவி பணம் பறிக்கும் 2 இஸ்லாமியர்களை வெளுத்த பொதுமக்கள்!
நாமக்கல் அருகே தனியாக உள்ள பெண்களை குறிவைத்து மயக்கம் மருந்து கொடுத்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடும் 2 முஸ்லீம் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
![தனியாக உள்ள பெண்கள் மட்டும் குறி! மயக்க மருந்து தூவி பணம் பறிக்கும் 2 இஸ்லாமியர்களை வெளுத்த பொதுமக்கள்! தனியாக உள்ள பெண்கள் மட்டும் குறி! மயக்க மருந்து தூவி பணம் பறிக்கும் 2 இஸ்லாமியர்களை வெளுத்த பொதுமக்கள்!](https://kathir.news/h-upload/2021/10/24/1185744-fdss.webp)
நாமக்கல் அருகே தனியாக உள்ள பெண்களை குறிவைத்து மயக்கம் மருந்து கொடுத்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடும் 2 முஸ்லீம் நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.நாமக்கல் அருகே பூஜிக்கப்பட்ட சாமி தகடுகள், புடவை, ஊதுபத்திகள் எனக் கூறி 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுமாராக 1500 ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படும் 2 பேரை அடித்து உதைத்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் தில்லை நகர் பகுதிகளில் கடந்த 5ம் தேதி இரண்டு பேர் சாமி உருவங்கள் பொறித்த தகடுகள், புடவை மற்றும் ஊதுபத்திகள் உள்ளிட்டவைகளை 1500 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அதிலும் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பூஜிக்கப்பட்ட பொருட்கள் எனக் கூறி அவர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் நிலையில், இன்று மீண்டும் அப்பகுதிக்கு வந்து விற்பனைக்காக சென்றுள்ளனர்.
500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூடநம்பிக்கையை பயன்படுத்தி 1500 ரூபாய்க்கு அவர்கள் விற்றுள்ளதாகவும் பெண்கள் மீது ஒருவிதமான மயக்க மருந்தை தூவியதாக கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் தர்மஅடி கொடுத்து அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்கள் பற்றி விசாரித்ததில் சேலத்தை சேர்ந்த முகமது அலி மற்றும் இர்பான் என்பது தெரியவந்துள்ளது.
Source, Image Courtesy: Polimer