Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூரில் அதிர்ச்சி - தீ வைக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் கொட்டகை

கடலூரில் அதிர்ச்சி - தீ வைக்கப்பட்ட முத்துமாரியம்மன் கோயில் கொட்டகை

ThangaveluBy : Thangavelu

  |  28 April 2022 1:28 PM GMT

கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. அங்கு கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 27) காலை கோயில் கீற்று கொட்டகை தீடீரென்று தீர்ப்பிடிக்க தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் முடியவில்லை, இதனால் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் நெல்லிக்குப்பம் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் கீற்று கொட்டகை முழுவதிலும் எரிந்து போனது.

இது தொடர்பான புகாருக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீற்று கொட்டகைக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா அல்லது விபத்தா என்ற கோணத்திலும் விசராணை நடத்தி வருகின்றனர். கோயில் கீற்று கொட்டகைக்கு தீ வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News