Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.!

திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.!

திருச்சி விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2021 4:31 PM GMT

திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசிய மர்ம நபர் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News