Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சியின் லட்சணம் இதுதானா! செங்கல்பட்டில் பள்ளியை தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்!

தி.மு.க. ஆட்சியின் லட்சணம் இதுதானா! செங்கல்பட்டில் பள்ளியை தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  20 Feb 2022 12:42 PM GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது மெய்யூர் என்ற கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை திடிரென்று இரவோடு, இரவாக மர்ம நபர்கள் சிலர் இடித்து தரை மட்டமாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத்தில் இருந்த இரும்பு மற்றும் மற்ற சில பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இது பற்றி ஊராட்சி மன்றத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பள்ளியை இடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திமுக ஆட்சியில் பள்ளியை சர்வ சாதாரணமாக இடித்து செல்லும் அவலநிலையை எண்ணி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News