Kathir News
Begin typing your search above and press return to search.

தேர்தல் எதிரொலி: நெல்லையில் காவல் துணை ஆணையர் தலைமையில் வாகன சோதனை.!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

தேர்தல் எதிரொலி: நெல்லையில் காவல் துணை ஆணையர் தலைமையில் வாகன சோதனை.!

ThangaveluBy : Thangavelu

  |  2 March 2021 10:45 AM GMT

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதே போன்று வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனிடையே தேர்தல் தேதி அறிவித்த நாள் முதலே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என கூறப்பட்டது. இதனால் தமிழகத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.




இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், நெல்லையில் தேர்தல் அதிகாரிகளும் காவல்துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் வண்ணார்பேட்டை, செல்லபாண்டியன் சிலை அருகே மத்திய துணை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தொடரும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News